ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பை ஏற்று, முதலில் ஜோர்டான் நாட்டுக்குச் செல்கிறார். இந்தியா மற்றும் ஜோர்டான் இடையிலான 75 ஆண்டுகால உறவுகளை முன்னிட்டு, இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
நாளை ஜோர்டானில் இருந்து எத்தியோப்பியா நாட்டுக்கு பிரதமர் செல்கிறார். இந்தப் பயணத்தில், இருநாடுகள் இடையிலான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தியோப்பியா பயணத்தை நிறைவு செய்த பிறகு, டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் ஓமன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தில், இந்தியா மற்றும் ஓமன் இடையிலான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

























