புதுச்சேரியில் சிறுபான்மையினத்தவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சொல்லும் விஜய், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசாதது ஏன் என, பிஜேபி மூத்த தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எப்போதும் நான் வாய் திறக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பது, எந்த மாதிரியான அரசியல் என்று கேள்வி எழுப்பினார். சிறுபான்மையினருக்காக பேசும் விஜய், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று வினவினார். அதேநேரத்தில் தமிழ்நாட்டில் விஜயைப் பார்த்து, திமுக பயப்படுவதாகவும் அவர் கூறினார்.
























