ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக, ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று மட்டும் சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று மேலும் ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, நகை வாங்கும் எண்ணத்தில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம், 12 ஆயிரத்து 770 ரூபாயாகவும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 160 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 234 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

























