ரஜினிகாந்தின் படத்தில் இருந்து, சுந்தர் சி விலகியதற்கான காரணத்தை, படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் கூறி இருக்கிறார்.
கமலஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், ரஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்குவதாக இருந்த சுந்தர்.சி, திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். இதுகுறித்து, கமல் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிக்கு கதை பிடிக்கும் வரை தொடர்ந்து கதைகளை கேட்போம், புதிய இயக்குனர்களாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால், தேர்வு செய்வோம் என்று அவர் கூறினார்.
























