மீனவர்களின் கோரிக்கைகள் அத்தனையையும் நிறைவேற்றும் மீனவ நண்பனாக திராவிட மாடல் அரசு தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக மீனவர் தினத்தையொட்டி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், உழைப்பும் உறுதியும் மிக்க மீனவத் தோழர்கள் அனைவருக்கும் உலக மீனவர் நாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
மீனவர் நல மாநாடு, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயர்வு, மானிய டீசல் அளவு உயர்வு, கடனுதவிகள், மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், தூண்டில் வளைவுகள் என மீனவர்கள் கோரிக்கைகள் அத்தனையையும் நிறைவேற்றும் மீனவ நண்பனாக என்றும் நமது திராவிட மாடல் அரசு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்

























