வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் விரும்பும் வெற்றிக்கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
“இல்லம் தேடி, உள்ளம் நாடி” என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரேமலதா, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். வரும் ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாடு, சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக பிரமாண்டமான முறையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை, தொண்டர்கள் விரும்பும் ஒரு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

























