திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழா சோமரசம்பேட்டை அருகே இன்று நடைபெறுகிறது. இந்த திருமண நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்துகிறார்.
இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் காலை 11 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் 767 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் திருச்சி வரும் முதல்வர் பொன்மலைப்பட்டி அருகே முதியவர்களுக்கான அன்புச்சோலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று திருச்சி வந்த முதலமைச்சரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
(வெயிட்..விஸ்வல்)
முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

























