பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 190 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. எனவே அந்த கூட்டணி, ஆட்சியை தக்க வைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், 46 மையங்களில் தற்போது எண்ணப்படுகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்களில் வெற்றி தேவை எனும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, பிஜேபி – ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்.டி.ஏ 190 இடங்களில், முன்னிலை வகிக்கிறது. அதாவது பிஜேபி மட்டும் 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 79 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 42 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 32 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், பிற கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கட்சியின் வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட, முன்னிலை வகிக்கவில்லை.

























