தென்காசி மாவட்டம் சுரண்டையில், காய்கறி ஏற்றி வந்த லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுரண்டை நகர்மன்ற உறுப்பினர் உஷாபிரபு, அவரது கணவர் அருள்செல்வம், தங்கை பிளஸ்ஸி ஆகியோர், அருகில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி, இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியதில், படுகாயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலின்பேரில் அங்கு வந்த சுரண்டை போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

























