ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக, நாளை டெல்லி வருகை தருகிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இந்தியா-ரஷியா நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது, இதில், பங்கேற்க ரஷியா அதிபர் புதின், நாளை இந்தியா வருகிறார்.
2 நாள் பயணமாக டெல்லி வரும் புதின், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின்னர் பாரம்பரிய விருந்தில் கலந்து கொள்கிறார்.
ரஷிய-இந்திய மாநாட்டின்போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வணிகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த முக்கிய ஆலோசனைகளும் நடைபெற உள்ளன. புதினின் வருகையையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசாருடன், ராணுவத்தினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.


























