முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கடற்கரை அருகில் அமைந்துள்ளது. சிறந்த பரிகார தலமாக விளங்கும் இந்த ஆலயத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பக்தர்கள் வருகை சற்று அதிகரித்துள்ளது.
அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதன் பிறகு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து, முருக பெருமானை வழிபட்டு செல்கின்றனர். சாமி தரிசனத்திற்கு 5 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக, பக்தர்கள் தெரிவித்தனர்.

























