துபாயில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் வான்வழி மற்றும் சாலைப் போக்குவரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து எமிரேட்ஸ், பிளை துபாய் உள்ளிட்ட நிறுவனங்கள் பல விமானங்களை ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் ஆயிரக்கணக்கில் தவித்தனர். பலத்த காற்று, குறைந்த பார்வைத்திறன் மற்றும் மழை காரணமாக விமானங்கள் பாதுகாப்பாக புறப்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. முக்கிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்கி, சில இடங்களில் சிறு விபத்துகளும் ஏற்பட்டன.


























