இந்தியா – நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடியுடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, நியூசிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரி 95 சதவீதம் குறைக்கப்படும். இதனால், அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் ஏற்றுமதி 9 ஆயிரத்து 863 கோடியில் இருந்து 11 ஆயிரத்து 650 கோடி ரூபாயாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம், நியூசிலாந்தில் வேலைவாய்ப்பு, ஊதியம் உள்ளிட்டவற்றை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை வலுப்படுத்தும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























