தமிழக கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில், துணைக் கண்காணிப்பு குழுவினர், தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை கண்காணிக்க, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவிற்கு உதவியாக, துணைக் கண்காணிப்பு குழுவும் உள்ளது.
துணைக்குழுவில், அணைகள் பாதுகாப்பு ஆணைய தென் மண்டல இயக்குனர் கிரிதரனும், தமிழ்நாடு சார்பாக பெரியாறு வைகை வடிநில கோட்ட பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்ட பொறியாளர் செல்வம், கேரள மாநிலம் சார்பாக, இடுக்கி மாவட்ட நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர் லிவின்ஸ் பாபு, நீர்ப்பாசன பிரிவு பொறியாளர் கோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர், அணைக்கு வரும் நீர்வரத்து, நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் குறித்து, நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
























