கவிஞர் சுரதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் உவமைக் கவிஞர் சுரதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசின் சார்பாக அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்தவகையில், இன்று அவரது 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அசோக் பில்லர் மாநகராட்சி பூங்கா அருகில் உள்ள அவரது சிலைக்கு, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

























