தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணையும் எண்ணம் இல்லை என்று, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக-வைத் தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் வெற்றிபெற முடியாது என்று குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், தனக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்றும் தினகரன் கூறினார்.
























