நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாநில சுயாட்சி உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தீர்ப்பு வழங்கிய சுவாமிநாதனை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர பங்கேற்று நீதிபதியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து சங்பரிவார் கும்பல் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

























