இந்தியாவில், தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை 2031-ல் உருவாக்கிக் காட்டுவேன் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வானுயர் ஜி.எஸ்.டி.பி வளர்ச்சி விகிதம், பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை என குறிப்பிட்டுள்ளார்.
பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும், ஜி.எஸ்.டி.பி வளர்ச்சியில், 16 சதவீதத்துடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால், அதுதான் திராவிட மாடல் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கியே கூறியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே, தமிழ்நாட்டின் பொருளாதாரம் பத்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மொத்த மதிப்பு 31 ல லட்சத்து 19 ஆயிரம் கோடி என்றும் தெரிவித்துள்ளார்.
தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி. 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்!, இது உறுதி என்றும் ஸ்டாலின், தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

























