யாருடன் கூட்டணி என்பது குறித்து, பிப்ரவரி மாதம் முடிவு எடுக்கப்படும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைவாரா என்பது பற்றி அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அதுபற்றி தனக்குத் தெரியாது என்றார்.
அதேநேரத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும் என்றும் டிடிவி.தினகரன் குறிப்பிட்டார்.

























