வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மதுரை, தேனி ஆகிய மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.
மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 63 புள்ளி 94 அடியாக உள்ளது. இந்நிலையில் வைகைஅணையில் இருந்து பெரியார் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 300 கன அடியிலிருந்து ஆயிரத்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி , மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கால்வாய் வழித்தடத்தில் உள்ள மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

























