சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் உரிமைத் தொகை விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் நடிகர் சத்யராஜ். நடிகை தேவயானி, ரோஹினி உள்ளிட்ட திரை பிரலங்களும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த துளசிமதி முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் மேலும் 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இவர்களையும் சேர்த்து, இனி மாதம் 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். நாட்டிலேயே முன்னோடித் திட்டமான இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் செயல்படுத்துவதாகவும், இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்தால் மகளிர் முன்னேற்றம் அடைந்து, உரிமைகளைப் பெற்றிருப்பதைப் போன்று, உரிமைத்தொகையும் உயரும் என்றார்.
























