திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை சின்னகாளிப் பாளையம் பகுதியில் கொட்டுவதை கண்டித்து, தடையைமீறி போராட்டம் நடத்தியதாக பிஜேபி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்ன காளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கிடங்கு அமைத்து குப்பைகள் கொட்டுவதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் பல கட்டங்களாக போராடி வருகின்றனர். நேற்றைய போராட்டத்தின்போது போலீஸாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, 8 பிரிவுகளின் கீழ் 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து, திருப்பூர் குமரன் சிலை அருகே அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மாநகராட்சி மேயர் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் வீடு முன்பு குப்பைகளை கொட்டி போராடுவோம் என்று, அண்ணாமலை அறிவித்தார். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக அண்ணாமலை உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

























