குற்றாலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை, 2-வது நாளாக தொடர்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில், தூண்டில் வளைவையும் தாண்டி தண்ணீர் விழுவதால், அங்கு பொது மக்கள் 2-வது நாளாக குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், அருவிக்கு குளிக்க வந்த பலர், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

























